வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் து.மு.கதிர்ஆனந்துக்கு ஆதரவாக சிபிஎம் வேலூர் தெற்கு தாலுகா கமிட்டி சார்பில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. சங்கரன்பாளையம், விருபாட்சிபுரம், பள்ள இடையம்பட்டி, சித்தேரி, அரியூர் பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து துண்டுபிரசுரங்கள் வழங்கி வாக்களிக்க கோரி தாலுகா செயலாளர் எஸ்.செல்வி தலைமையில் வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.மகாலிங்கம், கமிட்டி உறுப்பினர்கள் நரசிம்மன், புண்ணியமூர்த்தி, பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.