districts

img

நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கம் சிஐடியு சங்கத்துடன் இணைகிறது

திருவண்ணாமலை,நவ.19- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மண்டல பணியாளர்களுக்கான  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ் மின் நகரில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு நிர்வாகி மணிகண்டன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநிலச் செயலாளர் என்.ராசப்பன், சிஐடியு மாநில நிர்வாகி நாகராஜன், கடலூர் மண்டலத் தலைவர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும்  கொள்முதல் பணியை ஒதுக்கீடு செய்தல், பருவகால பணியாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு ஏற்படும் பாதகங்கள், 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான விளக்கிப் பேசினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தை சிஐடியு தொழிற் சங்கத்துடன் இணைப்பது என தீர்மானம் இயற்றப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 பேர் கொண்ட நிர்வாக குழுவும், அதன் தலைவராக ந.மணிகண்டன், செயலாளராக எஸ்.செல்வம், பொருளாளராக கே.அய்யப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.