மதுராந்தகம், செப். 4- தில்லி மற்றும் கர்நாடக மாநில கட்டுமான வாரியத்தில் வழங்குவது போல் தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஓய்வூதி யம் ரூ.3000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கை எம்ஜிஆர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் சி.செல்வகுமார் தலை மையில் மதுராந்தகத்தில் நடைபெற்றது. வி.திருமலை வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.குமார் பேசினார். மாவட்ட செயலாளர் டி.பாபு வேலை அறிக்கையும் பொருளாளர் கே.வேணுகோபால் வரவு செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அரி கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம், சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே நாரா யணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எம்.ரமேஷ், சிபிஎம் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநில குழு உறுப்பினர் எம்.கலைச்செல்வி பேசினார். பெண் தொழிலாளிகளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் என்ற வாரிய கூட்ட முடிவை அமலாக்கவேண்டும், ஓய்வூதியம் பெறும் தொழிலாளி மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்க வேண்டும், இறுதி புதுப்பித்தல் தவறிய 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங் கிடவேண்டும், கர்நாடக மாநிலம் போல் தீபாவளி பண்டிகை காலபோனஸ் தொகை ரூ. 5ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்கு முன்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து எங்கு நடந்திருந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம் என்பதை உறுதி படுத்த வேண்டும், ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு வீடு திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வீடு கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும், விண்ணப் பித்து காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து வீடு மற்றும் வீடுகட்டுவதற்கு மானிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என் மன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது புதிய நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக டி.பாபு, மாவட்டச் செயலாளராக வி.திருமலை, பொரு ளாளராக எம்.கலைச்செல்வி உள்ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டனர்.