districts

img

கதவனையுடன் தடுப்பணை கட்டும் பணி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம், பிப்.8- சிதம்பரம் அருகே கிள்ளை, தில்லை விடங்கன், கீழ சாவடி, குச்சிபாளையம், எடப்பாளையம், கிள்ளை தைக்கால்,  பின்னத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட  கிராமங்களில் உள்ள 1450 ஏக்கர் பாசன நிலங்கள் சொக்கன் ஓடை பயனடைந்து வருகிறது. சொக்கன் ஓடை வாய்க்காலில் கடை மடைக்கு தண்ணீர் தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கும், மழை மற்றும் வெள்ள காலங்களில் வெள்ளை நீரை வெளியேற்றியும் உப்ப னாற்றில் இருந்து கடல் நீர் வாய்க்காலில் உட்புகாமல் இருக்க கதவணையுடன் கூடிய தடுப்பணை  கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. தற்போது பயனற்று இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் உப்பு நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாதிப்படைகின்றன.  எனவே சொக்கன் ஓடை கடைமடை பகுதி யில் ஒழுங்கியம்( கதவணை யுடன் கூடிய தடுப்பணை) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், விவ சாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், ரூ.9 கோடியில் குச்சிபாளை யம் அருகே சொக்கன் ஓடை யில் ஒழுங்கியம் அமைக் கும் பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.  இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் சாராட்சியர் கிஷன் குமார், நீர்வளத்துறை செயற்பொறி யாளர் காந்தரூபன், உதவி பொறியாளர் ரமேஷ்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.