districts

img

மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் சர்வீஸ் சாலை அமைத்திடுக

சென்னை, பிப். 8- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஜோதி நகரில் பகுதிசபை கூட்டம் முரளி தலைமையில் நடைபெற்றது. 3, 7, 8 ஆகிய சாலைகள் மணலி எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்க வேண்டும். 8ஆவது தெருவில் அமைக்கப்படாமல் உள்ள ஒரு பகுதி சாலையை  சீரமைக்க வேண்டும். கடந்த மிக்ஜம் புயல் மழையால்  பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மணலி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சுமார் 3 கி.மீ.  நீளத்திற்கு இடைவெளி இல்லாமல் சாலையின் நடுவே  தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலை இல்லாததால்  பொதுமக்கள் எதிர்திசையில் செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இரண்டு  பக்கமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். முல்லை  நகர் அருகே போக்குவரத்தை முறைப்படுத்த ரவுண்டானா அமைக்க வேண்டும். டி.எஸ்.கோபால் நகரில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். கோயில் நிலங்கள், அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அனைத்து கோரிக்கைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றி தொகுத்து பேசினார். கூட்டத்தில் சுகாதாரத் துறை ஆய்வாளர்  கார்த்திக், உதவி பொறியாளர் அன்னலட்சுமி, ஜோதிநகர் தலைவர் உதயகுமார், செயலாளர் மோனி, டி.எஸ்.கோபால்  நகர் நிர்வாகிகள் மோகனசுந்தரம், செல்லதுரை, சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் அலமேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.