districts

img

அரசமைப்பு சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை...

நாட்டைக் காப்போம் கூட்டமைப்பு சார்பில், இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை கலைப் பயணக் குழுவிற்கு செவ்வாயன்று (அக்.3) கோயம்பேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை, கோயம்பேடு வணிக வளாக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்த வரவேற்பை அளித்தன. இந்த நிகழ்வில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் க.உதயகுமார், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், சிபிஎம் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.நீலமேகம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்து பேசினர். அப்போது முரசு குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.