districts

img

இருளர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கிராம கணக்கில் பதிவிட அதிகாரி உறுதி

திருவள்ளூர், அக் 11- நெமிலிச்சேரியில் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (அக் 11), ஆவடி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட நெமிலிச் சேரி ஊராட்சி, இருளர் பாளையத்தில் கடந்த மூன்று  தலைமுறையாக  இருளர் இனத்தைச் சேர்ந்த   50 க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு முன்பு 20 குடும்பங்களுக்கு தோராய பட்டாவை வழங்கினர். இதுவரை யில் தோராய பட்டாவை கிராம பதி வேட்டில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் 10 இருளர் இன குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா கிடைக்கா மல் அரசின் எந்த சலுகைகளும் பெற முடி யாமல் வாடுகின்றனர். இந்த நிலை யில் உடனடியாக விண்ணப்பித்த அனை வருக்கும் பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே கட்டிய 9 தொகுப்பு வீடுகள் மேற்கூரைகள் பழுதடைந்து கம்பிகள் தெரிகிறது.  கான்கிரீட் கற்கள் பெயர்ந்து விழுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அளவிற்கு  ஆபத்தான நிலையில் உள்ள  தொகுப்பு வீடுகளை  சீரமைக்க வேண்டும். அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ்,  வீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 15 நாட்களில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை இந்த போராட்டத்தின் விளைவாக இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாக்களை அடுத்த 15 நாட்களில் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆவடி வட்டாட்சியர் தெரி வித்துள்ளார்.சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை நேரடியாக சென்று பார்வையிட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். இதற்கு சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கி னார். இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.கங்காதுரை, மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராமசாமி, சிபிஎம் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபட்எபிநேசர், தமுஎகச மாவட்ட செயலாளர் கி.பாரி ஆகியோர் பேசினர், ராதா நன்றி கூறினார்.