districts

img

தோழர் எஸ். பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு

கள்ளக்குறிச்சி, பிப்.9 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், களமருதூர் அருகில் பிள்ளையார்குப்பம் துணை மின் நிலையத்தில் தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினைவு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார். சங்கத்தின் கொடியை மாநிலச் செயலாளர் ஆர்.சிவராஜ் ஏற்றி வைத்தார். பின்னர், களமருதூர் கடை வீதியில் ஒன்றிய அரசின் தனியார் மயத்தை தடுப்போம் மின் துறையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநில பொதுச் செய லாளர் எஸ்.ராஜேந்திரன், மின்துறை தனி யாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடினார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நடை முறைப்படுத்தினால் மின் கட்டணம் உயரும் அபாயம் இருக்கிறது என்றும் எச்சரிக்கை செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், கே.சலீம்,கோட்டத் தலைவர் ஆர்.ஏழுமலை,தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை,திருநாவலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.