சென்னை, அக். 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி, என்எஸ்கே நகர் கிளை உறுப்பினர் தோழர் பி.மார்ச்சான் சனிக்கிழமையன்று (அக்.21) மாரடைப் பால் காலமானார். அவருக்கு வயது 64. என்எஸ்கே நகரில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.சுந்தரம், பகுதிச்செயலாளர் கே.மகேந்திரவர்மன், பகுதிக்குழு உறுப்பினர்கள் தா.சுகுமார், பெ.சீனிவாசன், எம்.முத்துராஜன், ம.உதய குமார், ஆ.பெரியசாமி, டி.குமரவேல், எம்.உஷா, கிளைச் செயலாளர்கள் ஆனந்தன், சுந்தர்ராஜ், ரமேஷ், கணேஷ் குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (அக்.22) நடைபெறுகிறது.