சென்னை, அக். 16 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், மதுரை மாவட்ட முன்னோடி களில் ஒருவருமான தோழர் கே.கந்தசாமி திங்களன்று (அக்.16) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலப்பாதிப்பால் சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு சிறப்பு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, ஊடகவியலாளர் விஜயானந், குப்பன் (ஏஐடியுசி) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வுகள் அக.17 அன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. சிபிஐ இரங்கல் அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் விடு தலைப் போராட்ட காலத்தில் மதுரை நகரிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர் தோழர் கே.கந்தசாமி. முதல் தலைமுறை தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, கே.பி. ஜானகியம்மாள் போன்றோரின் வழி நின்று செயல்பட்டார். அவரது மறைவுக்கு, செவ்வணக்கம் செலுத்தி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.