districts

img

தோழர் கே. முனிவேல்ராஜா மறைவு

திருவள்ளூர்,டிச 1- திருவள்ளூர் மாவட்டம், சோழ வரம் பகுதி ஆங்காடு கட்சி கிளை உறுப்பின ரும்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பினருமான தோழர் கே.முனிவேல்ராஜா (வயது55),  வெள்ளி யன்று (டிச 1), காலை மாரடைப்பால் கால மானார்.  அவருக்கு வயது 55.    இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சோழவரம் பகுதி தலை வர், செயலாளராக பணியாற்றி அந்த பகுதியில் இளை ஞர்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சோழவரம் ஒன்றிய குழு உறுப்பினராக செயல்பட்டார். விவசாயிகள் விவசாய தொழிலாளர் சங்கத்தில் செயல்பட்டபோது கிராமப்புற விவசாயிகளை விவசாய தொழிலாளர்களை சங்கத்திற்காக திரட்டினார்.  அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், பி.துளசிநாராயணன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.நடேசன், கதிர்வேல், ஜெய வேல், ஆர்.சித்ரா, விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். கட்சி யின்  மாநில கட்டுப்பாட்டுகுழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்தனர். தோழர் முனிவேல் ராஜா விற்கு பொற்செல்வி என்ற மனைவி உள்ளார். அவரது உடல் ஆங்காட்டில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது.