districts

img

தோழர் ஜே.குணசேகரன் காலமானார்

புதுச்சேரி, ஜன.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில மூத்த உறுப்பினர் தோழர் ஜே.குணசேகரன் (வயது 72) காலமானார். புதுச்சேரியின் பாரம்பரியமான சுதேசி பஞ்சாலையில் தொழிலாளியாக பணியாற்றியவர், சிஐடியு தொழிற்சங்கத்தை புதுச்சேரியில் உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், சிபிஎம் புதுச்சேரி உருளையன்பேட்டை கிளை முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். உருளையன்பேட்டை கன்னி வீதியில் வசித்து வந்த   தோழர் ஜே.குணசேகரன் சிறிது காலம் உடல் நலம் சரியில்லாததால் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,பெருமாள்,பிரபுராஜ்,சீனுவாசன்,கொளஞ்சியப்பன்,சத்தியா,  மாநிலக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஜோதிபாசு உள்ளிட்ட திரளானோர் அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்கள். பின்னர் தேங்காய்திட்டு இடுகாட்டில் அவரது இறுதிநிகழ்ச்சி நடைபெற்றது.