districts

img

‘பாரதி மேடை’ தோழர் கோவிந்தராஜ் காலமானார்

சென்னை, டிச. 3 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதி மூத்த உறுப்பினர் ‘பாரதிமேடை’ எம்.கோவிந்தராஜ் திங்களன்று (டிச.2) காலமானார். அவருக்கு வயது 93. ராயப்பேட்டை பகுதியில் தோழர் பச்சையப்ப னோடு இணைந்து பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நற்பணி மன்றம் மூலம் சமூக சீர்திருத்த முற்போக்கு கலை நிகழ்ச்சி களை நடத்தியவர் எம்.கோவிந்தராஜன். 1960-களில் தொடங்கி அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு ‘பாரதி மேடை’ என்ற பெயரில் சென்னை முழுவதும் மேடை அமைத்துக் கொடுத்தவர். ஆயிரம் விளக்கு, புஷ்பா நகர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொங்கல் விழாக்கள் நடத்த உதவி புரிந்ததோடு, பாரதி படிப்பக மாணவர்களுக்கு முற்போக்கு கலை நிகழ்வு களை கற்றுக்கொடுத்து மேடையில் அரங்கேற்றம் செய்தவர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், களப்பணியில் கம்யூனிஸ்டு கள் பகுதியில், பாரதி மேடை கோவிந்தனை பற்றி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்  பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே. முருகேஷ், கே.முருகன், கே.எஸ்.கார்த்தீஷ்குமார், வில்லிவாக்கம் பகுதி செய லாளர் எம்.ஆர்.மதியழகன், பகுதி குழு உறுப்பினர்கள் ஜி.அன்பழகன், சி.மார்ட்டின், ஏ.எல்.மனோ கரன், எம்.முரளி, யூஜீன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று (டிச.3) நாதமுனி மயா னத்தில் நடைபெற்றது.