அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மத்திய சென்னை மாவட்டத்திலிருந்து தோழர் பிருந்தா நினைவுச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சுடர் பயண தொடக்க நிகழ்வு புதனன்று (செப்.28) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. சுடரை மருத்துவர் ஜெயராணி வழங்க சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெ. தனலட்சுமி பெற்றுக்கொண்டார். மாவட்டத் தலைவர் ஏ. சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். மனோன்மணி, மாவட்ட பொருளாளர் சலோமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.