சென்னை, ஏப். 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 70ஆவது வட்ட கிளைச் செய லாளராக செயல்பட்ட தோழர் பி.அசோகன் (59) முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம், சென்னை சுடர் தொண்டு நிறு வனம் சார்பில் ரத்ததான, கண் பரிசோதனை முகாம் வெள்ளியன்று (ஏப். 14) நடைபெற்றது. கிளைச்செயலாளர் ஏ.சுரேஷ் தலைமை தாங்கி னார். பகுதிக்குழு உறுப் பினர் எம்.ஏ.அயூப்கான் வர வேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அரசி யலமைப்பு சட்டத்தை பாது காப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். சிபிஎம் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோட்டீஸ்வரன் அசோகன் படத்தை திறந்து வைத்தார். மாநிலக்குழு உறு ப்பினர் எம்.ராமகிருஷ்ணன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். ஜெ.அன்புராஜ் நன்றி கூறினார். இதில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செய லாளர் வி.ஜானகிராமன், எம். ராஜ்குமார், தே.பா.தமிழ் மணி, நாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.