districts

img

நூறுநாள் வேலையை முழுமையாக வழங்கிடுக விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், டிச. 22- வையாவூர் ஊராட்சி யில் நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வையாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட 8வது வார்டு கொளம் பாக்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா காந்தி நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 80 நாட்களாக பணி செய்து வந்த நிலையில் ஊராட்சி தலைவர் திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணி தள பொறுப்பாளர் மாற்றி யுள்ளார். மேலும் கடந்த ஒருவாரமாக பணி கொடுக்காமலும் இருந்துள்ளார். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறை யிட்டபோது பொது மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 100 நாள் பணியில் மீதமுள்ள 20 நாட்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பணியில் உள்ள அதே பணித்தள பொறுப்பாளர் நியமிக்க வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொருளாளர் வி.சசிகுமார் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் க.புரு ஷோத்தமன், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் மு.தமிழ்பாரதி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவ ருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டம் கைவிடப் பட்டது.