போக்குவரத்து துறை தனியார் மயமாக்கலை கண்டித்தும், பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆவடி பணிமனையில் பொதுமக்களை சந்தித்து பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் சம்மேளன பொருளாளர் வி.சசிகுமார், பணிமனை தலைவர் ஜி.கணேசன், செயலாளர் டி.சஜு குமார், பொருளாளர் என்.யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.