districts

img

கடலூரில் சமுதாய வளைகாப்பு: அமைச்சர் பங்கேற்பு

கடலூர், மார்ச் 8 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கடலூரில்  நடைபெற்றது. விழாவுக்கு  மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சிந்தனை செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.  இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 120 கர்ப்பிணி பெண்களுக்கும், கடலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 100 கர்ப்பிணிகளும் என மொத்தம் 220 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.  பின்னர் 5 வகையான உணவு வழங்கப்பட்டது. இதில் நாடாளு மன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்,  துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோமதி நன்றி கூறினார்.