districts

img

ராணிப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை, அக். 16 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் திங்களன்று (அக். 16)  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு 200 கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை களை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை  வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி பணியாளர் கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை அமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஆற்காடு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.