districts

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் விருகம்பாக்கம் பகுதி எம்ஜிஆர் நகர் மேற்கு கிளை கட்சி உறுப்பினர் தோழர் கே.காசி காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் விருகம்பாக்கம் பகுதி எம்ஜிஆர் நகர் மேற்கு கிளை கட்சி உறுப்பினரும். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், புரிசை கண்ணப்ப தம்புரானின்  புதல்வரும் கூத்து  பட்டறையில் இயங்கியவருமான  தோழர் கே.காசி, உடல்நலக் குறைவால் தனது இல்லத்தில் காலமானார். அவரது உடல் தண்டலம் சவீதா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு தானமாக வழங்கபடவுள்ளது. செங்கொடி போர்த்தப்பட்ட  அவரது உடலுக்கு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்  ஜி.செல்வா, தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.ரங்கசாமி, தீ.சந்துரு மற்றும் விருகை பகுதிக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

;