districts

img

தோழர் சுப்பிரமணிக்கு கலசப்பாக்கத்தில் நினைவஞ்சலி

திருவண்ணாமலை, ஜன. 13- திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளாலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினருமான வே.சுப்பிர மணிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் வட்டத்தில் உள்ள விவசாயிகளின் அடிப்படை பிரச்ச னைகளுக்காக தொடர்ந்து அயராது பாடு பட்டவர் தோழர் வே.சுப்பிரமணி, மரணிப்பதற்கு முன்தினம் கூட, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவ சாய சாகுபடிகளுக்கும் நிவரணம் கேட்டு நாள் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர் என தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், பி.சுந்தர், ச.குமரன், இடைக் கமிட்டி உறுப்பினர் ஆ. திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.