districts

img

தோழர் ம.மீ.ஜெயிலனின் நினைவு தினம்

தோழர் ம.மீ.ஜெயிலனின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாதவரத்தில் எங்க வாப்பா வீட்டு குடும்பத்தார் ஆண்டு தோறும் நடத்தும் ரத்ததான முகாம் நிகழ்வை பாராட்டி சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் நடராஜன் திங்களன்று (டிச.26) விருது வழங்கினார். விருதை முகாம் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஜெ.பாத்திமுத்துஜெகரா, எம்.நிஹார் பெற்றுக்கொண்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்டான்லி மருத்துவமனை ரத்தவங்கி நிர்வாகி டாக்டர்.ஸ்ரீதேவி, ஜெ.ஜமால்பாஷா, வா.கி.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.