சென்னை,ஏப்.5- தமிழகத்திற்கு என ‘தோல் மற்றும் காலணிக் கொள்கை’ விரைவில் வெளி யிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செய்யார் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில்,“காலணி உற்பத்தியில், தேசிய மற்றும் உலக அளவில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தின் பங்களிப்பு, தேசிய காலணி உற்பத்தியில் 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் இருக்கிறது. காலணி மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் காலணிச் சந்தையைக் கைப்பற்ற, நம் மாநிலம் பெரும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கி றது” என்றார். தமிழகத்திற்கு என “தோல் மற்றும் கால ணிக் கொள்கை”, விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. ஏற்கெனவே, பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம்காட்டிக் கொண்டி ருக்கிறார்கள். ஆகவே, அத்துறையில், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திட முடி யும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மோட்டார் வாகனத்துறை, மின்னணு வியல், தகவல் தொழில்நுட்பம், பட்டாசு ஆலைகள், காலணி மற்றும் தோல் பொருட் கள் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் பெருமளவில் பணிசெய்து வரு கிறார்கள். சமூகநீதி மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்ப டுத்தும் வகையில், “மகளிர் கொள்கை” ஒன்றை விரைவில் அரசின் சார்பில் நாங்கள் வெளியிட இருக்கிறது என்றும் கூறினார்.