districts

சென்னை முக்கிய செய்திகள்

தேர்வு முடிவுகளில் குளறுபடி:  கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம், செப் 11- சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் நான்கு முறை தேர்வு முடிவுகள் வெளியிட்ட போதும் குளறு படியான தேர்வு முடிவுகள் வந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கினை கண்டித்தும், குளறுபடியான தேர்வு முடிவு களை உடனடியாக சரி செய்து வெளியிட  வலியுறுத்தியும்,  மூன்று, நான்கு முறை தேர்வு முடிவுகள் வெளியிடாமல் ஒரே முறை  தெளிவான தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தியும்,ஹால் டிக்கெட்டில் பாடக் குறியீடுடன் பாடத்தினுடைய பெயரையும் சேர்க்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழை தரமான காகிதத்தில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி  வகுப்பு புறகணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளைத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவநந்தினி உரையாற்றினார். கிளைச் செயலாளர் சக்திபிரியன், துணை செயலாளர் அஜீத்குமார், துணை தலைவர் அபிவிக்னேஷ்,  கிளை நிர்வாகிகள் தண்டபாணி, பாவனா,கனி, ஆகாஷ், சிந்தனைச்செல்வன், வெற்றி, ஸ்ரீகுரு, அருண், இலியாஸ் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் 2000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து அண்ணா மலை பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காரணத்தால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

பிரமாண்ட ரோபோடிக்ஸ் மையம்  சென்னையில் தொடக்கம்

சென்னை, செப்.11- இந்தியாவின் பிரமாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.   சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) ரூ.5 கோடி செலவில் இம்மையத்தை துவங்கியுள்ளது. இந்த தொழில் நுட்ப சாதனம் 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன சாதனம் ஆகும். கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை ,  எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலைகளை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை குகா  (KUKA) மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் ஃபேம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.  சிஐடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம்,குகா நிறுவனத்தின் மேலாளர் ராகவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் லேர்னிங் சென்டர், தமிழக அரசு தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாடுகளில் 

மாணவர்களுக்கு கராத்தே,ஜூடோ பயிற்சி
மாணவர்களுக்கு கராத்தே,ஜூடோ பயிற்சி சென்னை,செப்.11- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வி மேம்படுத்தும்  வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, கேரம், தடகளம் போன்ற பயிற்சி அளிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.  பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி யில் இந்த பயிற்சியை புதனன்று  மேயர் ஆர்.பிரியா தொடங்கி  வைத்தார்.