கடலூர்,செப்.10- கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் செப். 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொது பிரிவினர் என 22 ஆயிரத்து 82 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போ போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் , மூன்றாம் பரிசாக ரூ. 1000 வழங்கப்படுகிறது. மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். துவக்க விழா நிகழ்ச்சியில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணை யர் அனு மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.