ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் உயிரிழப்பு
அம்பத்தூர், அக். 1- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே சோத்துபெரும்பேடு, லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வர் ஜெகன். இவரது மகன் நவீன்குமார் (17). இவர் பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு படித்து வந்தார். இவர் பட்டாபிராம் அருகே இந்து கல்லூரி ரயில் நிலையப் பகுதி யில் இருப்புப் பாதையை கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த விரைவு ரயில் நவீன்குமார் மீது மோதியது. இதில் ரயில் சக்கரத்தில் அடிபட்டு இருப்புப் பாதையை ஒட்டிய முட்புதரில் நவீன்குமார் தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளார். இதை யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே ஊழியர்கள் இருப்புப்பா தையை ஆய்வு செய்து கொண்டிருந் தனர். அப்போது, அவர்கள் மாணவர் நவீன்குமார் சடலத்தை பார்த்து ஆவடி இருப்புப் பாதை காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, அக்.1- சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம், தனி யார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வரு கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 14-வது முறையாக வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனைக்கு இ.மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. மருத்துவமனை முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபு ணர்கள் உதவியுடன் சோத னையில் ஈடுபட்டனர். சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவலின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்தப் பள்ளிக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம் கிளை மாநாடுகள்
சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்களின் விவரம்:
மத்திய சென்னை மாவட்டம்
போக்குவரத்து அரங்க இடைக்குழு
அண்ணாநகர் பணிமனை - சி.கார்த்திக்
மத்திய பணிமனை - எஸ்.ராஜசேகர்
விரைவு போக்குவரத்து - எஸ்.தாமோதரன்
பேசின் பாலம் - பி.என்.பாலாஜி
பட்டுல்லா சாலை - எ.முனுசாமி
வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு
கிளைச் செயலாளர்கள் விபரம்.
திருப்பத்தூர் தாலுகா
ஜோலார்பேட்டை - பி.வீரபத்திரன்
புதுக்கோட்டை - ஆர்.ஆனந்தன்
கோவிலூர் - ஆர்.ஜெயசித்ரா
கோட்டை பகுதி ஏ.ஆர்.ரஹ்மான்
சுபேதார் வட்டம் - ஆர்.பர்வதம்
மேற்கத்தியானூர் - மாதேஸ்வரன்
குரும்பேரி - ஆர்.வெங்கடாசலம்
திருப்பத்தூர் நகரம் - எம்.சரவணன்
சிங்கம் பாளையம் - வி.சிங்காரம்
கீழானூர் - ஜி.லோகநாதன்
வழுதலம்பட்டு - க.சிவானந்தம்
நெல்லி வாசல் - ஏ.ஆறுமுகம்
பெரியகரம் - எஸ்.தியாகமூர்த்தி
அனிகானூர் - ஜி.பெருமாள்சாமி
குடியாத்தம் நகரக்குழு
3-வது வார்டு - ஜி.சம்பத்
4-வது வார்டு - டி.மோகன்
7-வது வார்டு - ஜி.யுவராஜ்
8-வது வார்டு - எம்.கோபி
12-வது வார்டு - எஸ்.விண்டல் வில்கி
16-வது வார்டு - வி.டி.கலைமணி
13-வது வார்டு - சி.குருவைய்யா
22-வது வார்டு - வி.ரமேஷ்
23-வது வார்டு - ஏ.ஆறுமுகம்
24-வது வார்டு - பி.ஜெயக்குமார்
26-வது வார்டு - ஜெ.ராஜா
36-வது வார்டு - பழனி
காட்பாடி தாலுகா
14 வது வார்டு - கே.வீரபாண்டியன்
10 வது வார்டு - ஜி.ஆர்.கோவிந்தசாமி
9 வது வார்டு - கே.கோவிந்தராஜ்
வஞ்சூர் - டி.அஷோக்பாபு
பிடபிள்யூடி நகர் எஸ்.பானுமதி
சேனூர் - எஸ்.ஏ.செந்தாமரை
ஜாப்ராப்பேட்டை - டி.கண்ணன்
12 வது வார்டு - எஸ்.சத்யானந்தம்
மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை
சென்னை, அக். 1 - மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபரின் குடும்பத் திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. விருகம்பாக்கம் பகுதி, அசோக் நகர், ஜவஹர்லால் நேரு (100 அடி) சாலையில், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக மாநில நெடுஞ்சாலைத்துறை இரண்டு மாதங் களுக்கு முன்பு பள்ளம் தோண்டியது. ஒரு சில நாட்களில் பணிகளை முடித்து, சாலையை சமப்படுத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் ஞாயிறன்று (செப்.29) அந்த வழியாகச் சென்ற அம்பேத்கர் காலனியை ஐயப்பன் (வயது 33) அந்தப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். ஐயப்பனின் வீட்டிற்கு சென்று மார்க்சிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, பகுதிக்குழு உறுப்பினர்கள் சத்திய தாசன், பிரகாஷ், கந்தன் ஆகியோர் ஆறுதல் கூறினர். “நெடுஞ்சாலைத் துறையின் மெத்தனப் போக்கால் ஐயப்பன் உயிரிழந்தார். எனவே, ஐயப்பனின் குடும்பத்திற்கு தமிழ் நாடு அரசு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பணியை கிடப்பில் போட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோண்டப் பட்ட பள்ளத்தில் பணியை விரைந்து முடித்து சமப்படுத்தி செப்பனிட வேண்டும்” என்று கட்சியின் பகுதிச் செயலாளர் இ.ரவி விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, அக். 1- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக். 2) சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காந்தி ஜெயந் தியை முன்னிட்டு புதன் கிழமை (அக். 2) ஞாயிற்றுக் கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். அதன்படி மெட்ரோ ரயில்கள் அதன் சேவை நேரங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேரங்களில் இயங்கும். நெரிசல் நேரங்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ் வொரு 7 நிமிடங்களுக்கு மெட்ரோ ரயில் இயக்கப் படும். மேலும் நெரிசல் இல்லாத நேரங்களில் காலை 5 மணி முதல் மதி யம் 12 மணி வரை, 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங் களுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங் களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
15 காவல் அலுவலகர்கள் பணிஓய்வு
சென்னை,அக்.1- சென்னை மாநகரில் பணி ஓய்வு பெறும் 15 காவல் அதிகாரிகள் மற்றும் போலீ சாரை, காவல்ஆணையர் அருண் திங்களன்று நேரில் அழைத்து பாராட்டி சான்றி தழ் வழங்கினார். சென்னை மாநகர காவலில் பணிபுரிந்து வந்த உதவி ஆணையர் புரு ஷோத்தமன், (ஆயுதப் படை-1), 1 மூத்த புகைப்படக் கலைஞர், 2 கண்காணிப் பாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கள் மற்றும் 1 உதவியாளர் என மொத்தம் 15 காவல் அலுவலர்கள் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகின்றனர். சென்னையில் 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் சென்னை,அக்.1- போக்குவரத்து நெரி சலை குறைக்க சென்னை நகரம் முழுவதும் புதிய இணைப்பு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 3 இடங்களில் புதிய இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றன.