ராணிப்பேட்டை, ஆக. 25 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம் கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கதிர்வேல் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஞாயிறன்று (ஆக. 25) தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் கதிர்வேல், மாநில துணை பொதுச் செயலாளர்கள் சுகந்தி, பி. செல்வன், பொருளாளர் மோகனா, மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், வேலூர் மாவட்ட செயலாளர் குபேந்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் என். காசிநாதன் ஆட்டோ சங்கம் மாவட்டச் செய லாளர் கேகேவி. பாபு, விவசாய சங்க வட்டார குழு உறுப்பினர் நிலவு குப்புசாமி, வாலிபர் சங்கம் எஸ். செந்தில், ஹரி. கார்த்திக், வழக்கறி ஞர் மருதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீஒமு மாநில துணை பொதுச்செய லாளர் சுகந்தி பேசுகையில், கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த ஆதிதிரா விடர் சமூகத்தை சார்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கதிர்வேல் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த வழக்கை காவல்துறை சந்தேகத்திற்கான மரணம் என்று பதிவு செய்துள்ளது. சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்ட அனை வரையும் கைது செய்ய வேண்டும். நியாயம் கேட்கச் சென்ற நண்பர்களை சரமாரியாக தாக்கிய அனைவரையும் கைது செய்யவேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம், அரசு நிர்வாகம் உடனே தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் வேண்டும் என தமிழக அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கையுடன், தொடர்ந்து போராடி வருகிறது இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் தேவை இல்லை என சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். தற்போது உள்ள சட்டங்கள் போது மானது என தெரிவித்துள்ளார். ஆனால் கதிர்வேலை போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் , பெண்கள் சாதி ஆணவ படுகொலை செய்யப்படுகின்றனர். ஆகவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு கோரிக்கை வைத்துள்ளது என்றார்.