districts

img

ரத்த அழுத்த பரிசோதனையில் செவிலியர் கல்லூரி உலக சாதனை

சென்னை, நவ.24-  சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சவீதா செவிலியர் கல்லூரி வெறும் 6 மணி நேரத்தில் 10,308 பேருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து புதிய உலக சாதனை படை த்துள்ளது.   நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட இந்த சாதனையானது, பிலிப்பைன்ஸ் உலக சாதனை ஒன்றியத்தால் அதிகாரப்பூர் வமாக அங்கீகரிக்கப்பட்டது,  இதற்கான விருதை சிமாட்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் என்.எம்.வீரய்யன் ஏற்றுக் கொண்டார். சிமாட்ஸ் பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சவீதா செவிலியர் கல்லூரி மாண வர்களின் கூட்டு முயற்சியைக் கொண்டாடும் வகையில், உலக சாதனை ஒன்றியத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டி. கிராப்ட் இந்த விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை துணைவேந்தர் டாக்டர். தீபக் நல்லசாமி, முதல்வர் டாக்டர். விஜயலட்சுமி மற்றும் துணை முதல்வர் டாக்டர் பரிமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.