districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆட்சியர் வளர்மதி ஆய்வு

ராணிப்பேட்டை, ஜூன் 9 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம்  நடத்தும் தொகுதி – IV  தேர்வு ஞாயிறன்று (ஜூன் 9) ராணிப்பேட்டை மாவட்டத்தில் 106 மையங்களில் நடை பெற்றது.  கங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்  பள்ளி, ஆற்காடு SSS கல்லூரி ஆகிய தேர்வு  மையங்களில் தேர்வர்கள் இத்தேர்வு எழுதுவதையும், மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் தேர்வு எழுதுவதையும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் 106 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 121  தேர்வு அறைகளில் மொத்தம் 32 ஆயிரத்து  970 தேர்வாளர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 27,175 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 5,795 தேர்வர்  தேர்வு எழுத வரவில்லை. தேர்வுமையங்களில் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டது. தேர்வுமைய நடைமுறைகளை கண்காணித்திடவும், அனைத்து பணிகளும் வீடியோபதிவுகள் செய்யும் பொருட்டு மொத்தம் 126 வீடியோகிராபர்கள் நியமிக் கப்பட்டிருந்தனர். ஆட்சியர் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.