districts

img

பயிர்சேதத்தை குறைத்து மதிப்பிட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம், ஆக.14 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர் சேதத்தை குறைத்து மதிப்பீடு செய்து  ஆட்சியர் பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொர்ணாவாரி பருவத்திற்கான நெல் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் என பல பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயி ரிடப்பட்டது. ஆடி மாதம் துவங்கிய நிலை யில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள நெற் பயிர்களை அறுவடை செய்து வரு கின்றனர். இந்நிலையில் காஞ்சி புரம் மாவட்டத்தில் கடந்த 10 தினங்க ளாகவே இரவு மற்றும் மாலை வேலை களில் கனமழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் எல்லாம் நீர் சூழ்ந்து கொண்டு வடிகால் இன்றி இருந்ததால் நெற்கதிர்களை அறு வடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஆடி முதல் வாரத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகள்  அனைத்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு போய் விவசாயிகள் காத்திருந்த நிலையில் அங்கும் நெல் மூட்டை கள் அனைத்தும் மழைநீரில் சேதம் அடைந்து விட்டது. கடும் மழையால் மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்ட நெல் வயல்கள் மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் கதிர்விட்டு அறுவடைக்கு தயா ராக இருந்த நிலையில், மழையின் பாதிப்பால் நெல் பயிர்கள் சாய்ந்து விட்டது. மாவட்ட ஆட்சியர்  மாவட்ட முழுவதும் மழையால் சேதாரம் ஏற்பட்டுள்ள அனைத்து நெல் வயல்களையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறையும், வருவாய் துறையும் கணக்கெடுப்பு எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் காய்கறிகள் வேர்க்கடலை போன்ற பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்றவாறு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். என தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் வாலாஜாபாத் வட்டம் , வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலநிலை மாற்றம் தவறிய நிலையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. விவ சாய நிலங்கள் அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து வேளாண் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் 250 ஏக்கர் விலை நிலங்கள் சேத மடைந்துள்ளதாக அரசுக்கு கருத்து அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். விவசாய சங்கங்கள் 500 ஏக்க ருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கப் பட்டது என கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் 250 ஏக்கர் மட்டுமே என கணக்கில் கொண்டதும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் வைக்கப்பட்டுள்ள நெல் குவி யல்களை இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவும் , அதே நேரத்தில் மாவட்டத்தில் குறைந்த சேதம் என மாவட்ட ஆட்சி யர் கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வேளாண்துறை  முறையாக  ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சேத மடைந்த அறுவடை நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.