திருவள்ளூர், நவ 2- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஏரியில் வியா ழனன்று (நவ. 2) வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணி களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வரத்து, கொள்ளளவு, கரைகளின் உறுதித் தன்மை மற்றும் நீர் வழிபாதையில் தூர்வாரும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சார் ஆட்சி யர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ், ஆசிக்அலி பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் (நீர்வளம்) பொதுப் பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் அருண் மொழி, உதவி பொறி யாளர்கள் கௌரிசங்கர், சுந்தரம், உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.