கள்ளக்குறிச்சி, செப்.10- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செப்.10 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மகப்பேறு வார்டில் கழிவுநீர் செல்லும் பாதையை பார்வையிட்டார். கழிவுநீர் வடிகால் வசதி முறைப்படுத்த வேண்டும், மருத்துவமனையில் சுற்றுப் புறத்தில் உள்ள குப்பைகளை தினந்தோறும் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து,மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தை பார்வையிட்டு,கழிவுநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பின்னர் அவசர கவனிப்பு மற்றும் மேற்கு மையத்தினை ஆதரவற்றோருக்கான மனநல பிரிவு பார்வையிட்டு, ஆதரவற்றவர்களுக்கான சிகிச்சை முறைகள், மீட்பு வழிமுறைகள், மருத்துவ சிகிச்சைகள் போன்ற பல்வேறு தகவல்களை குறித்து கேட்டறிந்தார். இம்மையத்தில் கழிவறைகளை முறையாக சீரமைத்து பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை காலம் துவங்க உள்ளதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறம் மழைநீர் தேங்கும் பகுதியில் பார்வையிட்டு மழை நீர் உடனுக்குடன் வெளியேறும் வகை யில் மழைநீர் வடிகால் வசதி உடனடியாக ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) நேரு, மருத்துவர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலருக்கு உடனிருந்தனர்.