கடலூர், ஆக.4-
கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் புறநோ யாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு கள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரக வியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை (ஆக.4) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படு கிறதா என கேட்டறிந்தார்.
மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.