காஞ்சிபுரம், மே.9 - ஆசிய தடகள போட்டி யில் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் கார்த்திகேயனுக்கு, காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பாராட்டு தெரிவித்தார். 21-வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டு போட்டிகள்-2024 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாயில் மார்ச் 24ந்தேதி முதல் 27 வரை நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் சங்கரா கலைக் கல்லூரியில் பிகாம் 2-ம் வருடம் படிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் என்ற மாணவன் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று 3ம் இடத்தினை வென்று வெண்கலம் வென்று பெருமை சேர்த்தார்.