districts

img

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாநில அரசின் நிவாரணபொருட்களை கொண்டு செல்லும் கடலோர காவல்படை

சென்னை,டிச.21 திருநெல்வேலி, தூத்துக் குடி  ஆகிய மாவட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலோர காவல்படையினர்  மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். சில பகுதிகளில் வெள்ள  நீர் வடிந்தாலும், 17-18 டிசம்பர் 23 அன்று ஏற்பட்ட  வரலாறு காணாத மழையி னால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் தென் தமிழக மாவட்டங்களின் பெரும் பகுதிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம் நான்கா வது நாளாக நிவாரணபணி களை மேற்கொண்டது. இந்திய கடலோர காவல் படை உட்பட பல்வேறு படைகள் இதில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. மதுரை விமான நிலை யத்தில் இருந்து இயக்கப் படும், இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள், மாநில நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அத்தியாவ சிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றன. தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல்படை  மாவட்ட தலைமையகம் அத்தியாவசியப் பொருட் கள் கிடைக்காத பகுதி களில் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் மாநில  அதிகாரிகளுடன் ஒருங்கி ணைத்து வருகிறது.  கடலோர காவல்படையின் பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும்  ஏஎல்எச் ஹெலி காப்டர் மற்ற இடங்களைத் தவிர, தூத்துக்குடி புன்னைக்கரை பகுதியில் நிவாரண நடவடிக்கைகளில் உதவின. இந்திய கடலோர காவல் படையினர் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் மற்றும் விமானங்கள் தவிர 250க்கும் மேற்பட்ட பணியாளர்களை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.