முதலமைச்சர் நிவாரணம்
சென்னை,செப்.7- ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
விஷவாயு தாக்கி 2 பேர் பலி
ஆவடி, செப். 7- ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் ஒன்றிய அரசின் ஓசிஎப் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பி.சம்பத் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சி.தேவன், மோசஸ் ஆகியோர் வியாழனன்று (செப். 7) ஈடுபட்டுள்ளனர். அப்போது தொட்டிக்குள் இறங்கிய மோசஸ் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்க தொட்டிக்குள் இறங்கிய தேவனும் மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மோசஸ் பலியானார். தேவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-இன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெறுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தத்தளித்த மீனவர்களை மீட்டது கடலோர காவல் படை
சென்னை, செப். 7- சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24ஆம் தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கணபதி பெருமாள் என்ற பெயர் கொண்ட விசைப்படகில் ஓட்டுநர் வேலு தலைமையில் 9 பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த படகு நடுக்கடலில் 26 ஆம் தேதி பழுதானது. விசைப்படகு பழுதானதால் காற்றின் திசைக்கு ஏற்ப அது நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது வயர்லெஸ் மூலம் அருகில் உள்ள தமிழ்நாடு விசைப்படகுகளுக்கு தகவல் அளித்தனர். மீனவர்கள் பழுதான படகை தேடிப் பார்த்தனர், ஆனாலும் அவர்களால் கண்டு பிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் இதுகுறித்து கடலோர காவல்படை கமாண்டருக்கு தகவல் அளித்தார். ஆனால் கடலோரக் காவல் படையினரால் காணாமல் போன படகை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடலில் கப்பல், படகுகள் காணாமல் போகும்போது கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற படகை பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி சர்வதேச எல்லையிலும், இந்திய எல்லையிலும் செல்லும் கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து 240 நாட்டிக்கல் மைல் தூரத்தில் பழுதான படகு தத்தளித்துக் கொண்டிருந்ததை, காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்தவர்கள் அதன் அருகே சென்று, அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பழுதான படகை கயிறு கட்டி வேறு திசையில் செல்லாமல் நிறுத்தினர். இதுகுறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் அளித்து மீட்டனர்.
காவல்துறை தடுப்பை மீறி மறியல்: கடலூர் மாவட்டத்தில் 1,400 பேர் கைது
கடலூர்,செப்.7- சிதம்பரத்தில் தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கலந்து கொண்டார். செயலா ளர்கள் ராஜா, செல்லையா, வாஞ்சிநாதன் உட்பட 151 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூரில் காவல்துறையினரின் தடுப்பை மீறி ரயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். 42 பெண்கள் உட்பட 212 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலத்தில் நடைபெற்ற ரயில் மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையின் தலைமை தாங்கினார். 100 பெண்கள் உட்பட 210 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பண்ருட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் தலைமை தாங்கினார்.65 பெண்கள் உள்பட 160 பேரை காவலர்கள் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் தலைமையில் மறியல் நடைபெற்றது. 50 பெண்கள் உட்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தேன்மொழி தலைமை தாங்கினார். 102 பெண்கள் உட்பட 170 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திட்டக்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன் தலைமையில் மறியல் நடைபெற்றது. 70 பெண்கள் உட்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலியில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திரு அரசு தலைமை தாங்கினார். 30 பெண்கள் உட்பட 102 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 150 பேர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 468 பெண்கள் உள்ளிட்ட 1,400 பேர் கைதானார்கள். இந்த போராட்டத்தில் 2500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊரப்பாக்கத்தில் கொள்ளையன் கைது
வண்டலூர்,செப்.7- கூடுவாஞ்சேரி காவல் துறையினர் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகத் திற்கிடமாக சுற்றிய வாலி பரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வீர முத்து என்பதும் நண்பர்க ளுடன் சேர்ந்து தனியாக செல்பவர்களை குறிவைத்து நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வீர முத்துவை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
மாதவரம்,செப்.7- மாதவரம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த அஜித்குமார்(19) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் வீட்டு முன்பு பெண்ணிடம் நகை பறித்த தையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறி முதல் செய்யப்பட்டது.
வேலூர்-திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் மறியல்
வேலூர், செப்.7- வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஐந்து மையங்க ளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டக் குழுக்கள் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு மாநிலக்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் நடைபெற்றது. காட்பாடி ரயில் நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ெஜ.சீனிவாசன் மற்றும் தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையிலும், குடியாத்தம் நகரம் மற்றும் தாலுகா, பேர்ணாம்பட்டு குழுக்கள் சார்பில் பேருந்து நிலை யம் முன்பு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி தலைமையிலும் மறியல் நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டக் குழு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலை வன் தலைமையிலும், வாணியம்பாடி, ஆம்பூர் வட்டக் குழுக்கள் சார்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட செய மாதவரம்,செப்.7- மாதவரம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த அஜித்குமார்(19) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் வீட்டு முன்பு பெண்ணிடம் நகை பறித்த தையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறி முதல் செய்யப்பட்டது. ற்குழு உறுப்பினர் எம்.இந்துமதி தலைமையி லும் நடைபெற்றது.
கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலம்
கடலூர், செப்.7- எல்ஐசி நிறுவனம் 1956 ஆம் ஆண்டு செப்டம் பர் 1 ஆம் தேதி தொடங்கப் பட்டது. இதை முன்னிட்டு இந்த வாரம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. கடலூர் டவுன்ஹாலில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். எல்ஐசி முதுநிலை மேலா ளர் தேவராஜ் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் பாரதி சாலை வழியாக சென்று மீண்டும் எல்ஐசி அலுவல கத்தை வந்தடைந்தது. இதில் எல்ஐசி முகவர்கள், பாலிசிதாரர்கள், அலுவலக ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அனை வருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.