districts

கூட்டு பாலியல்: அவமானத்தில் மாணவி தற்கொலை

திண்டிவனம், செப். 24- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தவர் 14 வயது மாணவி. இவரது தாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தந்தை மற்றும் தம்பியுடன் குடிசை வீட்டில் மாணவி வசித்து வந்தார். இந்நிலையில் வியாழக் கிழமை இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் காவல் துறை யினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்  சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான கார ணங்கள் குறித்து ஏதாவது தடயம் கிடைக்குமா என்று காவல் துறையினர் மாணவியின் வீட்டில் சோதனை செய்தபோது ஒரு செல்போன் கிடைத்தது. பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்காத நிலையில், மாணவிக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்று விசாரணையில் இறங்கினர். அந்த செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை வைத்து விசாரித்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்களுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலி பர்களை பிடித்து விசாரித்த போது, மாணவியுடன் உல்லாசமாக இருந்த திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். அந்த 2 வாலிபர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். மேலும் மாணவிக்கு அவர்கள் செல்போன் வாங்கி கொடுத்து, அதன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். மாணவியின் வீட்டுக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதை அறிந்த கிராம மக்கள் மாணவி குறித்து தரக்குறைவாக பேசிய தாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

;