கடலூர், நவ.14- 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 முதல் 20-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கூட்டுறவு வார விழாவின் முதல் நிகழ்ச்சியாக வியாழனன்று கடலூரில் பேரணி நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணி பீச் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கடலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் வரை சென்றது. இதில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.