districts

ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயம்

சென்னை, ஜூன் 20- சென்னை மாநகராட்சி நிர்வாகம் ராயபுரம், திருவிக நகர் மண்ட லங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விடுவதை தடுத்து நிறுத்தி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் நிரந்தர வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சியில் 5,657 கி.மீ. சாலை அமைப்புகளும், 282 மாநகராட்சி பள்ளிகளும்,173 மருந்த கங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங் களும், 214 விளையாட்டு மைதா னங்களும், 260 பூங்காக்களும்  உள்ளன.   மாநகராட்சியின் பணி விதிகளில் தெருவைப் பெருக்கு பவர் 500 மீட்டர் தூரம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், 250 வீட்டிற்கு ஒருவர் குப்பை எடுக்க வேண்டும் எனவும், கொசு மருந்து அடிப்பவர் 250 வீட்டிற்கு ஒருவர் எனவும் வரை யறுத்துள்ளது. சென்னை மாநக ராட்சிக்குள் நாள்தோறும் 5,000 முதல் 5,200 டன் வரை குப்பை சேகரி க்கப்படுகிறது. 

மாநகராட்சி பணி விதியின் அடிப் படையில் மேற்படி பணிகளுக்கு பெருமளவு ஊழியர்கள் தேவைப் படுகிறார்கள். மாநகராட்சி 155 கோட் டங்களாக இருந்தபோது  மேற்படி பணிகளுக்கு என்று சுமார் 25,000 நிரந்தர ஊழியர்கள் இருந்த னர். ஆனால், தற்போது  6,500க்கும் குறைவான நிரந்தர பணியா ளர்களே உள்ளனர். சென்னை மாநக ராட்சியின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடியை நெருங்கியுள்ளது. 1998ஆம் ஆண்டு சென்னையை சிங்கப்பூர் போல் மாற்றுவதற்கு ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத் திற்கு குப்பை அள்ளும் பணிகள் கொடுக்கப்பட்டது. அதில் முறை கேடுகள் நடந்ததாக உள் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மேற்படி நிர்வாகம் நீக்கப்பட்டு,  2006ஆம் ஆண்டு நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. மேற்படி நிர்வாக மும் முறையாக பணிகளை மேற் கொள்ளவில்லை என்று ராம்கே என்விரோ என்ஜினியர்ஸ் என்ற  நிறுவனத்திற்கு மூன்று மண்ட லங்களில் (அடையாறு, கோடம் பாக்கம், தேனாம்பேட்டை) குப்பை யை அள்ளும் பணிகளை கொடுத்த னர். மேற்படி மூன்று  நிறுவனங்களும் அனுபவத்தில் முறையாக பணிகள் செய்யவில்லை என்று கடந்த ஆட்சியில்  7 மண்டலங்கள் உபசேர் நிறுவனத்திற்கும், 3 மண்டலங்கள் மட்டும் ராம்கே என்விரோ என்ஜினி யர்ஸ் நிறுவனத்திற்கும் ஒதுக்கப் பட்டது. அதுவும் ஏற்கெனவே மேற்கொண்டு வந்த 9, 10 13 மண்டலங் களில் எழுந்த புகாரின் அடிப்படை யில் மேற்படி மண்டலங்களை ஒதுக் காமல் 1, 2, 3 மண்டலங்களையும் 7 ஆவது மண்டலத்தில் 3 வார்டுக ளையும்  ஒதுக்கினார்கள்.

தனியார் நிறுவனங்கள்  முறைகேடு

ஓனிக்ஸ் நிறுவனம் செயல்பட்ட போது சுமார் ரூ26 கோடி அளவில் முறைகேடு செய்திருப்பதாக தமிழ்நாடு  அரசின் உள்ளாட்சி தணிக்கை துறை அறிக்கையில் தெரி வித்தது. நீல் மெட்டல் பனால்கா நிறு வனமும் இத்தகைய முறை கேட்டில் ஈடுபட்டதால் அதனுடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ராம்கே என்விரோ என்ஜினியர்ஸ்  நிறு வனமும்  முறையாக குப்பை அள்ளும் பணியை செய்யாதது மட்டு மல்ல பெரிய அளவில் முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதேபோல் தற்போதுள்ள உபசேர் நிறுவனத்தின் மீதும் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்ற புகார் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் மேற்படி புகாரின் மீது மாநகராட்சி நிர்வாகம், எந்த நட வடிக்கையும் எடுப்பதில்லை.

கருத்து கேட்புகூட்டம்  முறையாக  நடக்கவில்லை

இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் ராய புரம், திரு.வி.க நகர் மண்டலங் களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்காக 16.6.2023 அன்று கருத்துக் கேட்கும் கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தை முறையாக குடியிருப் போர் சங்கங்களுக்குத் தெரிவிக்கா மல் பத்திரிக்கைச் செய்தியாக மட்டும் அறிவிப்பு வெளியிட்டி ருந்தனர். மேற்படி கூட்டத்திற்கு வந்தி ருந்த அனைவரும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள் ளனர்.

லாபம் ஒன்றே குறிகோள்

 குப்பை அள்ளும் பணியை அள்ளும் ஒப்பந்ததாரராக வருபவர் சென்னை நகரத்தின் தூய்மையைப் பற்றியோ, சுகாதாரத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அதிக லாபம் சம்பாதிக்க என்ன வழி என்று பார்க்கிறார்களே தவிர தேவையான பணியாளர்களை நியமித்து, சட்டப் படியான ஊதியத்தை வழங்கி குப்பையை முறையாக அகற்ற முற்படுவதில்லை. பிரதான சாலை களில் மட்டும் குப்பை அள்ளு கின்றார்களே தவிர, உட்புற தெருக் களில் முறையாக குப்பையை அகற்றுவதில்லை.

தற்காலிக ஊழியர்களை  நிரந்தரப்படுத்துக

 மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை ராயபுரம், திருவிக நகர் பகுதிகளை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். மேலும், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்க ளுக்கு கிடைக்கிற அரசு நிரந்தர வேலை வாய்ப்பை பறிக்கும் நட வடிக்கையாகும். தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கிறபோது எங்க ளுக்கு வாக்களித்தால் நிரந்தர வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று கூறிவிட்டு தற்போது தமிழ் நாடு அரசு இத்தகைய நடவடிக் கையில் ஈடுபடுவது வாக்களித்த மக்களை ஏமாற்றுவதாகும். பல பத்தாண்டு காலமாக குறைந்த சம்பளத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் அதனுடன் இணைந்த புறநகர் பகுதிகளிலும் தொகுப்பூதிய, தற்காலிக, என்.எம்.ஆர்  மற்றும் என்.யு.எல்.எம் (தேசிய நகர்புற வாழ்வாதார திட்டம்) தொழிலாளர்களாக  தற்போது  பணி புரியும் தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்தி, மேலும் தேவையான ஊழியர்களை நியமித்து மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக துப்புரவுப் பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணியை  மேற்கொண்டால் மட்டுமே சென்னை மாநகர மக்க ளின் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும்.

துரோகமிழைக்காதீர்

சென்னை பெருநகரில் பெரு வெள்ளம் வந்தபோதும், வர்தா, கஜா புயல்கள் வந்த போதும் கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கியபோதும் தற்போதுள்ள தொழிலாளர்கள்தான் சிறப்பான முறையில் பணி யாற்றினார்கள். சென்னை பெரு நகர மக்களும், ஊடகங்களும்  இத்தொழிலாளர்களின் பணியை பாராட்டி வணங்கினர். தங்களது அரசும் சான்றிதழும், சிறப்பு பரிசும்  அளித்து கவுரவித்தீர்கள். அத்த கைய தொழிலாளர்களை வேலை யிலிருந்து அனுப்புவது அத் தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகமாகும். எனவே, தமிழ்நாடு அரசு ராய புரம், திருவிக நகர் மண்டலங்களை தனியாருக்கு கொடுக்கும் சென்னை மாநகராட்சியின் நட வடிக்கையை தடுத்து நிறுத்தி நேரடியாக மாநகராட்சி நிர்வாகமே துப்புரவு உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.