ராணிப்பேட்டை, ஆக. 17 - ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னா வரம் ஊராட்சி, சேந்தமங்கலம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வியாழனன்று (ஆக. 16) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.இந்த முகாமில் பின்னாவரம், இலுப்பை, தண்டலம், அரிகிலபாடி, மாங்காட்டுசேரி, பரமேஸ்வர மங்கலம், திருமாதலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலால் உதவி ஆணையர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாசப்பிரகாஷ், இரவிச்சந்தி ரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பின்னாவரம் சிவ. மணிவண்ணன், இலுப்பை தண்டலம் அனுசுயா மகாலிங்கம், பரமேஸ்வரமங்கலம் சங்கர், அரிகிலபாடி வள்ளி, மாங்காட்டு சேரி ரேகா, திருமாதலம் பாக்கம் ஜோதிலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.