புதுச்சேரி,நவ.22- புதுச்சேரி அழகு கலை ஒப்பனை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் நல சங்கம் (சிஐடியு) சார்பில் கண், பல், மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் வெள்ளிக் கிழமை (நவ.22) நடைபெற்றது. லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடந்த இந்த முகாமிற்கு சங்கத் தலைவர் அருள்மணி, செயலாளர் ஜானகி ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பிரபுராஜ் பரி சோதனை முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பங்கேற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் சுதா சுந்தரராமன், பெண்கள் நலம் குறித்து கலந்துரையாடினார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு அகர்வால் மருத்துவமனை, பிவெல் மருத்து வமனை மருத்துவர்கள், ஊழியர்கள் பங்கேற்று கண் மற்றும் பல் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகி கள் பவானி, பிரவீனா கோமதி, ராஜலட்சுமி, ராஜலட்சுமி, ஆனந்த் , சிந்துஜா உட்பட திரளான பெண்கள் பங்கேற்றனர்.