districts

img

பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணி

திருவள்ளூர், ஜன. 11- கல்பாக்கம் ஊராட்சி யில் தூய்மை பணியாளர் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்க நிர்பந்திக்கப் பட்டதால், அவரது இடது கால் பாதிக்கப்பட்டு அழுகும் நிலைக்கு சென்று விட்டது. இதனால் அந்த காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன தால் லலிதா என்ற பெண் தொழிலாளர் அதிர்ச்சிய டைந்துள்ளனர். மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பாக்கம் ஊராட்சியில் லலிதா, பொன்னி, முத்து ஆகியோர்  தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கல்பாக்கம் ஊராட்சியில் கிராம சாலை களில் இரு புறங்களிலும் உள்ள குப்பைகளை எடுப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிப்பது, வீடுவீடாக சென்று சமைய லறைகளில் உள்ள குப்பை களை சேகரிப்பது போன்ற பணிகளில் தினம் ஈடுபட்டு வருகின்றனர். இவர்க ளுக்கு தேவையான கையுறை, காலணிகள், முகக்  கவசம் போன்ற பாது காப்பு உபகரணங்கள் எதை யும் ஊராட்சி நிர்வாகம்  வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜன வரி 1 அன்று  தொடர்ந்து 3 நாட்கள் கல்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் தூய்மை காவலர்கள் பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளனர். இதில் லலிதா (53), என்ற பெண் தொழிலாளர் காலணிகள் போன்ற உபகரணங்கள் இல்லாமல் பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளார். இத னால் அவரது  இடது கால் கடுமையாக  பாதிக்கப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காலை பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இடது காலை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் பெண் தொழிலாளர் லலிதா அதிர்ச்சியடைந்துள்ளார். ஏற்கெனவே கணவரை இழந்த நிலையில் குடும்பத்தின் வாழ்வாதா ரத்திற்காக பணியாற்றி வந்த  பெண் தொழிலாளிக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய சோகம் அவரது குடும்பத்தி னரை மட்டுமல்லாமல் சக தொழிலாளர்களின் குடும்பத்தினரையும் கண் கலங்க வைத்துள்ளது.   சிஐடியு வேண்டுகோள் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தெரிவிக்கையில்,  கல்பாக்கம் கிராம ஊராட்சி யில் தூய்மை காவலராக பணிபுரியும் லலிதாவுக்கு  கையுறை மற்றும் காலணி கள்  பாதுகாப்பு கவசங்கள் தராமல் பிளீச்சிங் பவுடர் அடிக்க வைத்த ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும்  மீஞ்சூர்  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  தூய்மை காவலர் லலிதாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலி யுறுத்தியுள்ளார்.