districts

img

அதிவேக வாகனம் மோதி துப்புரவு தொழிலாளி பலி

சென்னை, ஆக.5 - அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்புரவு தொழிலாளி பலியானார். தாம்பரம் மாநகராட்சி யில் துப்புரவு பணிகளை அவர்லேண்ட் என்ற தனி யார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து, குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கி வருகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தர்மண்ணா (வயது 35), மனைவி அனிதா, தம்பி லட்சுமணன் மற்றும் 5 குழந்தைகளுடன் அவர் லேண்ட் நிறு வனத்திற்கு சொந்தமான இடத்தில் தங்கி துப்புரவு பணியாற்றி வந்தார். தர்மன்னா, அனிதா, லட்சுமணன் ஆகியோர் திங்களன்று (ஆக.5) காலை யில் தாம்பரம் மேம்பாலம் முடிச்சூர் சாலை பகுதியில் குப்பைகளை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது கோயம் பேட்டில் இருந்து தக்காளி ஏற்றி வந்த பொலிரோ வாக னம், அதிவேகமாக வந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த தொழி லாளர்கள் மீது மோதியது. இதில் தர்மன்னா உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே மனைவி கண் முன்னே உயிரிழந்தார். காயமடைந்த தொழிலாளி லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். சிஐடியு தலையீடு இதையறிந்து தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலை வர் கு.ராஜன்மணி, பொதுச் செயலாளர் முருகேசன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தர்மன்னா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வற்புறுத்தினர். இதனையடுத்து அவர் லேண்ட் நிர்வாகம் தர்மன்னா குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், ஈமச்சடங்கு நிதி யாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஒப்புக் கொண் டது. மேலும் சிகிச்சை பெறும் லட்சு மணனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியது. குரோம்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த தர்மன்னா உடலுக்கு தாம்ப ரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ்,   தாம்ப ரம் மாநகராட்சி தொழி லாளர் சங்க தலைவர் கு. ராஜன்மணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.