சென்னை, மே 30 - திருவொற்றியூர் ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளிக்கு 2.62 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் செவ்வாயன்று (மே 30) மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், 4வது வார்டில் ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் வகுப் பறை பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில் 650 மாணவர்கள் பயில் கின்றனர். வகுப்பறை போதிய அளவு இல்லாத தால், பக்கத்து வீட்டின் ஒரு அறையை இலவசமாக பெற்று கல்வி கற்பிக்கப்படு கிறது. எனது கோரிக் கையை ஏற்று வடக்கு வட்டார துணை ஆணையர் பள்ளிகளை ஆய்வு செய் தார். அப்போது ஆணை யர் கூறியபடி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரப் படுமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மேயர்ஆர்.பிரியா, ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில் தற்போது 6 வகுப்பறைகள் உள்ளது. இந்த கட்டிடம் பழுதடைந் துள்ளதால், அதனை இடித்துவிட்டு இரண்டு மாடி கொண்ட கட்டிடம் கட்டவும், அருகில் உள்ள புதிய கட்டி டத்தின் முதல் மாடியில் கூடுதலாக ஒரு வகுப்பறை கட்ட என 2.62 ரூபாய் திட்டமதிப்பீடு தயாரிக்கப் பட்டுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றார். அப்போது, துணை கேள்வி எழுப்பிய ஆர்.ஜெய ராமன், ஆசிரியர்கள் பணி மாறுதலின் போது, உயர்நிலைப் பள்ளியில் இருந்து 9 ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக் கப்படுமா? என்று வின வினார். அதற்கு பதிலளித்த மேயர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.