கடலூர், பிப்.10- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் 24மணி நேர தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (பிப்.10) மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி தலை மையில் தர்ணா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் வரவேற்க தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி , மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசு ராமன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர். கடலூர் கடலூரில் மாவட்டத் தலைவர் இராம. வெங்கடாஜலபதி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. மகாலிங்கம், மாநில செயற்குழு உறுப்பி னர் கே. லெனின், மாவட்ட செயலாளர் எஸ். பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி கள் எல்.அரிகிருஷ்ணன், ஆர்.பாபு, கு. பொற்செழியன், ஆர்.காந்தி, ஏ.நாகம்மாள், எம்.எஸ்.ஆதிசங்கர், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தலைவர் டி.புருஷோத்தமன், மாவட்ட தலைவர் என். காசிநாதன், வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எம்.மருதவாணன் ஆகியோர் பேசினர். ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் ஜெ. மகேஸ்வரி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் எஸ். சரவணன், பார்சீலா வான சாஸ்திரி ஆனந்தபாபு , சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தவிச மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ், ஆர். மணிகண்டன் ஆகியோர் பேசினர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய தர்ணாவில் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். போராட்டத்தில் சகோதர சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தை வாழ்த்திபேசினர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பரிதிமாற் கலைஞன் தலைமையில் பல்வேறு அரசு துறைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் பி.ரவி தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் மாவட்ட செயலாளர் எல். அனந்த கிருஷ்ணன் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.செந்தில், மாநில துணை பொதுச் செயலாளர் கே.மகாலிங்கம், சகோதரசங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.