ராணிப்பேட்டை, டிச. 28 – பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கைத்தறி துறை உதவி இயக்குநரிடம் கைத்தறி நெசவாளர் சிஐடியு சங்கம் கோரிக்கை விடுத்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், பெஞ்சால் புயல் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெசவு குழியில் மழைநீர் ஊற்று ஏற்பட்டு தொடர்ந்து தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், கைத்தறி நெசவாளர்கள் கடந்த ஒரு மாதமாக மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில், கைத்தறி நெசவாளர் சிஐடியு சங்கத் தலைவர்கள் டிச.10 அன்று கைத்தறி துறை உதவி இயக்குநரை நேரில் சந்தித்தனர். அப்போது, பெஞ்சால் புயலால் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் துயரங்கள் குறித்து விளக்கமாக கூறியதுடன் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். மேலும் நேரில் வந்து பார்வையிடவும் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, கைத்தறி துறை உதவி இயக்குனர் சத்தியபாமா சனிக்கிழமையன்று (டிச. 28) வாழைப்பந்தல் பகுதிக்கு வந்தார். அங்கு, மழையால் பாதித்த நெசவாளர்களின் தறி குழிகளை பார்வையிட்டு கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் உரிய நிவார ணம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி யளித்தார். அப்போது கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மழைக்கால நிவாரணம் வழங்க சிஐடியு ராணிப்பேட்டை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். கிட்டு கோரிக்கை மனு அளித்தார். கிளை செயலாளர் பி. தேவன், தலைவர் ஜி. ராஜசேகர், பொருளாளர் பி. கோபு, இயற்கை ஆர்வலர் வே. நடராஜன் உள்ளிட்ட ஏராளமான நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.