புதுச்சேரி, ஜன.28- அரசு ஒப்புக்கொண்டபடி நல வாரி யத்தை செயல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு ஆட்டோ சங்கத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலி யார் பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மண வாளன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், துணைத் தலைவர் மது (எ) லிங்கேசன் வேலு மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், துளசிங்கம், செந்தில் குமார்,பழனி பாலன், நூர் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முதலமைச்சர் ரங்கசாமி முன்னி லையில் நடைபெற்ற அனைத்து ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் ஒப்புக் கொண்டபடி அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும். புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் அறிவித்தது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு, பொது மக்களுக்கு, சுற்றுலா பயணி களும் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் ஆட்டோ செயலியை உருவாக்க முத்தரப்புக் குழுவை ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக இயக்கப்படும் இருசக்கர வாடகை வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. குடும்ப பாதுகாப்பு நிதி நிகழ்வில் மரணமடைந்த சங்க உறுப்பினர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி தலா ரூ. 15 ஆயிரம் மூன்று குடும்பங்க ளுக்கு சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.