சென்னை, ஜன. 29 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாநில துணைத் தலைவருமான தோழர் இ.பொன்முடி புதனன்று (ஜன.29) கால மானார். அவருக்கு வயது 73. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் பிறந்த தோழர் இ.பொன்முடி, சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவராகவும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு தலைவராகவும் செயல்பட்டார். உடல் நலம் குன்றியதால் திங்களன்று (ஜன.27) தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், உதயகுமார், இளங்கோவன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அன்னாரது உடல் அஞ்சலிக்காக நங்க நல்லூர் தில்லை கங்கா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பி னர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை), எஸ்.கோபால் (திரு வள்ளுர்), கே.நேரு (காஞ்சிபுரம்), மாநிலக்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், ஐ.ஆறுமுகநயினார், எல்.சுந்தரராஜன், கே.வனஜகுமாரி, வே.ராஜசேகரன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச் செய லாளர்கள் எஸ்.கண்ணன், கே.திருச் செல்வன், கே.ஆறுமுகநயினார், வி.குமார், நிர்வாகிகள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.விஜ யன், கே.சி.கோபிகுமார், இ.முத்துக்குமார், சி.திருவேட்டை, எம்.தயாளன், எஸ்.கே.மகேந்திரன், வி.குப்பு சாமி, பகத்சிங் தாஸ், தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜன் சைதை ஜெ. (தமுஎகச), எஸ்.டேனியல் ஜெயசிங் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), தி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் (தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு), துளசிநாராயணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), ரவிக்குமார் (பெபி), ரமேஷ்சுந்தர் (மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம்) உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் ஜன.29 அன்று தில்லை கங்காநகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.