districts

img

அரசு ஊழியர்கள் அதிகம் இருப்பதாக புதுச்சேரி அரசு பொய் கணக்கு

 புதுச்சேரி,டிச.17- அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அள வில் அதிகம் இருப்பதாக புதுச்சேரி அரசு பொய் கணக்கை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது என தட்சிண ரயில்வே ஊழியர் சங்கத்தின்  முன்னாள் செயல்தலைவரும் சிஐடியு மூத்த தலை வருமான  ஆர்.இளங்கோவன் சாடி யுள்ளார். புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேள னத்தின் 48 ஆம் ஆண்டு அமைப்பு தினம்  கொடி யேற்றத்துடன் சனிக்கிழமை (டிச.16)  கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முல்லை நகரில் உள்ள சம்மேளனத்தில் நடைபெற்ற விழாவிற்கு சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சம்மேளன கொடியை முன்னாள் தலைவர் என்.சண்முகம் ஏற்றி வைத்தார். சம்மேளன ஸ்தாபக தலைவர்  மறைந்த சி.எச்.பால மோகனனின் சிலைக்கு ஓய்வூதியர் சங்கத்தின் கவுரவத் தலைவர் நடராஜன் மாலை அணிவித்தார்.  அமைப்பு தினத்தை யொட்டி நடைபெற்ற கருத்தரங்கத்தில் டிஆர்இயூ சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன் தொழிற்சங்க உரிமைகளும் நமது கடமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசுகையில், சாதி,மதங்களை கடந்து தொழிலாளர் என்ற ஒற்றை பார்வை யோடு நாம் இருக்க வேண்டும்.

நாட்டில் 85 விழுக்காட்டினர்  தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இத்தகைய வர்க்கத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேர் மக்கள் பிரதிநிதிகளாக  தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களின்  எண்ணிக்கையை குறைத்து கொண்டே செல்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் இணைய தளத்தை தற்போது பார்த்தால் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே இருந்த கணக்கே உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் ஊழியர்கள் அதிக அளவில் உள்ளார்கள் என்ற பொய் கணக்கை ஆட்சியாளர்கள்  காட்டி ஏமாற்று கின்றனர். எனவே படித்து முடித்து  வேலை கிடைக்கும் என்று கனவோடு  உள்ள வாலிபர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்களும்  தொழிலாளி வர்க்கம் தான் என்றார். முன்னதாக ஓய்வு பெற்ற சம்மேளன பொதுச்செயலாளர் க.ராதாகிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் கிறிஸ்டோபர், ஆனந்த கணபதி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சம்மேளன ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் முன்னால் தலைவர் கே.எம்.எஸ் 12ஆம் நினை வேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சம்மேளன கவுரவத்தலைவர் பிரேமதாசன், சம்மேளனம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட திரளான அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.