புதுச்சேரி, நவ.6- அறிவிக்கப்பட்ட தீபாவளி உதவித்தொகை எங்கே சிஐடியு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க அதி காரியிடம் சராமாரி கேள்வி எழுப்பி னார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டி கைக்காக ஆட்டோ, கட்டுமானம், கடை ஊழியர்கள் வீட்டு வேலை செய்யும் பெண்கள் என பல வகை பணி செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பண்டிகை கால உதவித்தொகை புதுச்சேரி அமைப்பு சாரா நல சங்கம் மற்றும் கட்டுமான நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமான தொழி லாளர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறி வித்தபடி கட்டுமான நல வாரியத்தில் இருந்து ரூ. 5,000 வழங்கப்பட்டு விட்டது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல சங்கத்திலிருந்து அறிவிக்கப்பட்ட ரூ.1,500 வழங்கப்படாததால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலை யில் அரசு அறிவித்த ரூ. 1,500 தொகையை வழங்க கோரி புதுச்சேரி வர்த்தகசபை பின்புறம் உள்ள அமைப்புசாரா நலச்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை (நவ.6) அதிகாரிகளை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் தரப்பில் சரியான பதிலும் அளிக்கவில்லை. பின்னர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் ஆளுநர் மாளிகையில் கோப்பு தங்கி உள்ளதாக தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த தொழிலாளர்கள் அங்கிருந்து இருந்து துணை நிலை ஆளுநரை சந்தித்து முறையிட சென்றனர். ஆளுநரை சந்திக்க மறுப்பு தெரிவித்து காவல்துறையினர், தடுத்து நிறுத்தினர் . பின்னர் அதிகாரிகள் தரப்பில் உதவித்தொகை வழங்குவதற்கான கோப்பு விரைவில் அனுப்பப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தொழிலாளர்களிடம் உறுதியளித்தனர். ஆளுநர் மாளிகை அதி காரிகளின் வேண்டுகோளின்படி சிஐடியு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.